காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை 103 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் அரியாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.