சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (பெப்ரவரி 4) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கே கொழும்பு கோட்டை நீதிவான் தடை விதித்துள்ளார்.
நாளை காலிமுகத்திடலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் எந்தவொரு போராட்ட இயக்கமும் அல்லது எந்தவொரு நபரும் நுழைவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.