இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (பெப்ரவரி 3) தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோரே தங்கள் பதவி விலகல் கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
மின் வெட்டு நடைமுறை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் அண்மைக்காலமாக நிலவுகின்றது. இந்தநிலையிலேயே உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.