இலங்கையில் பிறந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு, மன்னர் சார்ல்ஸ் III, 2026 ஜூலை 7 ஆம் திகதி விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக ‘சர்’ (Sir)…
சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும்,…
நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (13/07) முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நாட்களில் அதிகளவில்…
உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு…
கடந்த அரசாங்கக் காலத்தில் மின்னணு விசா (e-Visa) வழங்கும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்குப் பௌதீக ரீதியாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ தன்மை குறித்து மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10/07) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.…
யாழில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். யாழ் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத்…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்ளஅனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் , சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளும் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி…
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (08/07) காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04…
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை,…
பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு…
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து…
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை…
சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள 5,200 பல நாள் மீன்பிடிப் படகுகளில் 4,200 படகுகளுக்கு…
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, தனது மின்னணுச் சேவைத் தளம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில், நிறுவன வருமான வரி , கூட்டாண்மை வருமான வரி,…
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06/07) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account