அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் இன்று (ஜனவரி 29) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.