எழுவைதீவு முருகன் ஆலயத்திற்கு குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக குளிர்சாதனப்பெட்டி இன்மையால் பழவகைகள், பால் ,தயிர்,மாலை போன்ற பொருட்களை திருவிழா காலங்களில் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
இந்நிலையில் குளிர்சாதன பெட்டியினை கனடாவில் வசிக்கும் கந்தையா யோகேஸ்வரன் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த நலன்விரும்பிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஆலயத்தில் இன்னும் மேற்கொள்ளவேண்டிய வேலைகள் பல உள்ளதாக எழுவை சைவ பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.