நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் அமரர் சின்னப்புநாயகம் நவக்குமார் அவர்களின் ஞாபகார்த்தமாக துடுப்பாட்டம் கழக மைதானத்தில் நேற்றுமுந்தினம் (15 ஏப்ரல்) நடைபெற்றது.
முதலாவதாக உதசூரியன் விளையாட்டு கழகமும் இரண்டாவதாக சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகமும் மூன்றாவதாக ஸ்ரார் விளையாட்டு கழகமும் வெற்றிகளை தனதாக்கிக்கொண்டன.
இவ் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வில் கழகங்களின் அங்கத்தவர்கள் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (17 ஏப்ரல்) அமரர் அருணாச்சலம் கமலகுமார் ஞாபாகார்த்த கரப்பந்தாட்ட சுற்று ஸ்ரார் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.