நற்குண முன்னேற்ற அமைப்பினரது நெடுந்தீவுப் பிரதேச நிலையத்தினுடைய உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு மற்றும் நிலைய திறப்பு விழா என்பன கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது நற்குண முன்னேற்ற அமைப்பின் நெடுந்தீவுப் பிரதேச நிலைய அனுசரணையாளர் , நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்கள் நிலைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வரவேற்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகளில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரை , சிறப்புரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நிலையத்தில் கற்கும் மாணவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள்அவர்களது பெற்றோர்கள் , ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.