யாழ்ப்பாணம் சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று (பெப்ரவரி 2)அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கடவுளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலிலிருந்த 35,000 ரூபா பணமும், ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வாகனம் திருத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் இடம்பெற்று வந்த வருடாந்த மாகோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.