தேசிய சுற்றாடல் வாரத்தையொட்டி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் காக்கைதீவு கடற்கரையோரப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் மற்றும் மரநடுகை நேற்று(ஜூன் 1) காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்புத் திணைக்கள யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள்,சமூக மட்ட அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.