உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

 அதன் முழு விபரங்கள்…

அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது.

அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, சி.டி. விக்ரமரத்ன அன்று பொலிஸ் மா அதிபர் ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை.

சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார்.

அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த ‘சாரா ஜஸ்மின்’ இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள்.

இந்தக் கும்பல் நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும்.

இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது. எந்த வழியில் இவர்கள் சூழ்ச்சி செய்தாலும்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்னும் மிக வலுவான, உறுதியான சான்றுகளாக இருக்கின்றன. இதனால் தான் சலேயின் மனைவி இப்போது காணாமல் போயுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வெள்ளை வான் கடத்தல்களைச் செய்தவர் தான் இவர். ஜகத் அல்விஸ்தான் நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஜகத் அல்விஸ்தான் கோட்டாபயவின் தேவைக்கேற்ப போத்தல ஜயந்த போன்றவர்களின் கை-கால்களை உடைக்க உத்தரவிட்டார். கோட்டாபயவின் மிக நெருங்கிய நண்பன், அத்தனை விசுவாசி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எந்தெந்தச் சாட்சியங்களை அழிப்பது? எந்தச் சாட்சியங்களை நாம் புதிதாகக் கொண்டு வருவது என்று ஒவ்வொறு திங்கட்கிழமையும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இப்படித்தான் நௌபர் மௌலவி போன்றவர்களை முழுமையாக கோர்த்து விட்டு, 33 ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அதற்குப் பொருத்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் அவர்களுக்கு தேவையான ஆட்களை கண்டு பிடித்தார்கள்.

சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.

இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும். 

Share this Article
Leave a comment