By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!
நெடுந்தீவு

நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!

Last updated: 2024/12/07 at 6:02 AM
Published December 6, 2024 295 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய மருந்தாளர் சுகயீன விடுமுறையில் சென்ற காரணத்தால் சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு மாதங்களுக்கு ஒரு மருந்தாளர் என்ற சுழற்சி முறை அடிப்படையில் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றும் வகையிலேயே நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள  நிலையில் சுகயீன விடுமுறைக்கான பதிலாள் ஒருவர் நியமிக்கப்படாமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மருந்தாளர் விடுமுறையில் செல்லும் போது வைத்தியசாலை பணியிலுள்ள மூத்த பரிசாரகர்கள் இக்கடமையினை மேற்கொண்டதாகவும், இருந்தபோதும் இதனால் ஏற்படும் தவறுகளால் நோயாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமாயின் அது பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என்பதால் மருந்து வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மருந்தாளர் இன்மையால் தேவையான மருந்துகள் தொடர்பில் சிட்டை வழங்கப்படுமெனவும் அதற்கான மருந்தினை வெளியிடங்களில் பெறலாம் எனவும் அல்லது விடுதியில் தங்கி சிகிச்சை பெறலாம் எனவும் நோயாளர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் தெரிவிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூடிய கவனமெடுத்து நோயாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR December 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில் !!
Next Article நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் – டிசம்பர் 08
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?