நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் ஆயத்த வழிபாடுகளின் மூன்றாம் நாள் இன்றாகும்.
இன்றைய வழிபாடுகள் அனைத்தும் “பகிர்வினால் பகைமையை ஒழிக்கும் மனம் தாரும் இறைவா” எனும் கருப்பொருளிற்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
இன்றைய திருப்பலி மற்றும் மறையுரையை அமலமரித்தியாகிகள் துறவறசபையின் மறையுரைஞர் அருட்பணி கரோவ் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபிக்கவுள்ளார்.
மேலும் இன்றைய வழிபாடுகளை தூய பற்றிமா அன்னை ஆலயத்தின் மூன்றாம் அன்பிய குடும்பங்கள் சிறப்பிக்கவுள்ளனர்.
மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.