By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவில் பக்தர்களுக்கு உணவு வழங்க இந்தியா 1.01 கோடி ரூபா நிதியுதவி
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > கச்சதீவில் பக்தர்களுக்கு உணவு வழங்க இந்தியா 1.01 கோடி ரூபா நிதியுதவி
தீவகச் செய்தி

கச்சதீவில் பக்தர்களுக்கு உணவு வழங்க இந்தியா 1.01 கோடி ரூபா நிதியுதவி

Last updated: 2023/03/01 at 10:42 PM
Published March 1, 2023 242 Views
Share
2 Min Read
SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை நடத்துவதற்காக இந்திய அரசு 1.01 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று இந்திய ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளைமறுதினம் ஆரம்பித்து இரு நாள்கள் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்திருவிழாவின் முதல் நாள் இரவு மற்றும் அடுத்த நாள் காலையில் பக்தர்கள் அனைவருக்கும் இலங்கைக் கடற்படை சார்பில் உணவு வழங்கப்பட்டது. தற்போது இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியால் இந்த ஆண்டு கச்சதீவு திருவிழா நாளில் இந்தியாவில் இருநது வரும் பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கப்படாது. மறுநாள் காலை சிற்றுண்டி மட்டும் வழங்கப்படும் என்று இலங்கை கடற்படை நிர்வாகம் அறிவித்தது.

மேலும் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான உணவைக் கொண்டுவர வேண்டும் என்றும் இலங்கைக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் இருந்து கச்சதீவு செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பான செய்தி கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி தினகரன் நாளிதழில் வெளியானது.

இந்தநிலையில் கச்சதீவு திருவிழா நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒரு கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவை இலங்கை அரசுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது. (இலங்கை மதிப்பில் 4.40 கோடி ரூபா). கச்சதீவில் பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறைகள் கட்டுதல், குடிநீர் வசதி, சோலார் மின்விளக்குகள் அமைத்தல், உணவு உள்ளிட்டவைகளுக்காக மேற்கண்ட தொகையை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு முதல் நாள் இரவு மற்றும் காலையில் வழக்கம்போல் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று இலங்கைக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 3ஆம் திகதி (நாளைமறுநாள்) மாலை 5 மணிக்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருப்பலி பூசை, சிலுவைப்பாடு நிகழ்ச்சி, தேர் பவனி, திருவிழா திருப்பலி என இரண்டு நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது.

இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப் படகுகள், 12 நாட்டுப் படகுகள் உள்ளிட்ட 72 படகுகளில் ஆயிரத்து 960 ஆண்கள், 379 பெண்கள், 69 சிறுவர்கள் என தமிழக பக்தர்கள் படகு செலுத்தும் பணியாளர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட தமிழக பக்தர்கள் மொத்தம 2 ஆயிரத்து 408 பேர் கச்சதீவுக்கு புனிதப் பயணம் செல்கின்றனர் என்று தினகரன் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You Might Also Like

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

Anarkali March 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வர்த்தகக் கண்காட்சி!
Next Article இன்று முதல் 5 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

June 26, 2025
தீவகச் செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

June 26, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?