இ.போ.ச பஸ் சாரதிகள் தொடர்பில் முறையிட 1958 என்ற தொலைபேசிஇலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் பருவச்சீட்டு உடையவர்களுக்காக பஸ்ஸைநிறுத்தாமல் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிட இந்த தொலைபேசிஇலக்கத்தை பயன்படுத்த முடியும்.
இந்த தொலைபேசி இலக்கமானது பொதுமக்களுக்காக 24 மணிநேரமும்சேவையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.