By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வௌிநாட்டுக்கு அனுப்புவதாக 2 கோடி ரூபா மோசடி!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வௌிநாட்டுக்கு அனுப்புவதாக 2 கோடி ரூபா மோசடி!
இலங்கைச் செய்தி

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக 2 கோடி ரூபா மோசடி!

Last updated: 2023/08/11 at 4:56 PM
Published August 11, 2023 381 Views
Share
3 Min Read
SHARE

மட்டக்களப்பில் டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தலா 1 லட்சத்து 35,000 வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் வீட்டை நேற்று (ஓகஸ்ட் 10) பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போலி முகவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்து கொண்டு ஒரு நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டை ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த அடையாள அட்டையை காட்டி டுபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் குறைந்த செலவான 2 லட்சத்து 50,000 ரூபா செலவில் வேலைக்கு அனுப்புவதாக அறிந்திருந்தனர்

இதனையடுத்து சின்ன ஊறணியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஒருவர் இந்த வெளிநாட்டு முகவர் தொடர்பாக அறிந்த நிலையில் அவரின் நண்பர்கள் உட்பட 40 பேரை சேர்த்து அந்த போலி முகவிடம் அழைத்துச் சென்று தலா ஒருவருக்கு ஒரு லட்சத்து 20,000 ரூபா வீதம் 48 லட்சம் ரூபா பணத்தை சட்டத்தரணி மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை வழங்கியுள்ளார்.

இதில் கிளிநொச்சி – முளங்காவில், மட்டக்களப்பு, கல்லடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, கொக்குவில் உட்பட பல்வேறு பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த போலி முகவரை சந்தித்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிட மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் வரவழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து ஒரு போலி ஒப்பந்தம் செய்து கொண்டு முதலில் 1 இலச்சத்து 20,000 ரூபாவை முற்பணமாக செலுத்துமாறும் மிகுதியை வெளிநாடு சென்றதும் தரவேண்டும் என தெரிவித்து 3 வங்கி கணக்குகளை வழங்கி அதில் பணத்தை வைப்பு செய்யமாறு தெரிவித்ததையடுத்து பலர் குறித்த வங்கி கணக்கில் பணத்தை வைப்பு செய்ததுடன் சிலர் நேரடியாக போலி முகவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் மாத காலப்பகுதியில் பணத்தை கொடுத்து 7 மாதங்களாகியும் டுபாய்க்கு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் 11 ஆம் திகதி விசா வந்துவிடும் எனவும் அனைவரும் போவதற்கு தயாராக இருக்குமாறு தெரிவித்ததையடுத்து பலர் ஆடைகளை வாங்கி ஆயத்த நிலையில் இருந்துள்ளனர்.

இருந்த போது போலி முகவர் தன்னை டுபாயில் உள்ள பிரதான ஏஜன்சி ஏமாற்றிவிட்டர் எனவே அவருக்கு எதிராக மட்டு. மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு சம்பவ தினமான நேற்று (10) செய்யவுள்ளதாக தெரிவித்ததையடுத்து பணத்தை போலி முகவரிடம் கொடுத்த 60 மேற்பட்டோர் குற்ற விசாரணைண பிரிவு காரியாலயத்தின் முன் ஒன்று கூடி காத்திருந்த போது அங்கு முகவர் வராததையடுத்து ஒரு குழுவினர் முகவரின் நாவற்குடா வீட்டை முற்றகையிட்டு அவரை பிடித்துகொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் 2 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ளவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்ததுடன் ஏனைவர்களை அவர்களுடைய பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali August 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் வாகன தரிப்பிடம் அமைக்க கோரிக்கை!
Next Article கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?