நெடுந்தீவு பொதுஜனபெரமுன கட்சியின் பெயரில் இயங்கும் முகநூலில் இருந்து கடந்த வாரம் நெடுந்தீவில் நடைபெற்ற மணல் கடத்தலில் நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டிலும் மணல் காணப்படுவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இச் செய்தியினை அறிந்த நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளர் உடனடியாக விரைந்து நெடுந்தீவு பொலிசில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்தாக குறிப்பிட்டு பொதுஜனபெரமுன கட்சியின் நெடுந்தீவு இணைப்பாளருக்கு எதிராக நெடுந்தீவில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தனது பெயருக்கு களங்கம் விளைந்தாக விரைந்து செயற்படும் தவிசாளர் அவர்கள் நெடுந்தீவில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக தெரிந்தும் அதற்கு எதிராக எந்த நடடிவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நெடுந்தீவு பிரதேச சபையில் நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தினை மையப்படுத்தி தவிசாளர் உட்பட நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அனைத்து பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரிந்திருந்த போதும், மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் எவரும் இதனைத் தடுப்பதற்கு ஏன் முன்வரவில்லை என்பது மக்களது கேள்வியாக இருக்கின்றது.