By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு

மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Last updated: 2024/12/13 at 3:45 PM
Published December 13, 2024 160 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மற்றும் யாழ். போதனா மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இக்காய்ச்சலின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதன் மூலம் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனால், தற்போது இக்காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகள் மற்றும் தடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி போன்ற பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவியுள்ளதால், ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நோய்க்கு சிகிச்சை வழங்க தேவையான மருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி சுகாதார வைத்திய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக இந்த தகவல் பொதுமக்களுக்கு பரவப்படுத்தப்படுகிறது.

எலிக்காய்ச்சல் ஏற்படக்கூடிய அதிக ஆபத்து உள்ள விவசாயிகள், மீனவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்புமருந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாய திணைக்களத்துடன் இணைந்து கிராமங்களில் விவசாயிகளுக்கு தடுப்புமருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வந்து வைத்தியசாலைகள் மற்றும் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும், சிகிச்சைக்காக தேவையான மருந்துகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR December 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கணணி மயப்படுத்தப்பட்ட “பி” அட்டை (B Card) வழங்கல்.
Next Article யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமை பொறுப்பேற்பு.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?