By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் விசேட அறிவிப்பு
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் விசேட அறிவிப்பு
யாழ்ப்பாணம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் விசேட அறிவிப்பு

SUB EDITOR
Last updated: 2020/07/11 at 12:07 AM
Published July 10, 2020 19 Views
Share
1 Min Read
SHARE

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(ஜூலை 09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகிவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள 100 ஏக்கர் காணிகள்!

இளவாலையில் குழு மோதல்!!- இளைஞன் பரிதாபச் சாவு!!

மல்லாகத்தில் போதை மாத்திரைகளை விற்றவர் கைது!

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!- சோகத்தில் குடும்பம்!

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

கோப்பாய் வாள்வெட்டு!- குடும்பத்தினர் உட்பட 11 பேர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி!

SUB EDITOR July 10, 2020
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
Next Article யாழ்.வணிகர் கழகம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

January 28, 2023
யாழ்ப்பாணம்

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள 100 ஏக்கர் காணிகள்!

January 28, 2023
யாழ்ப்பாணம்

இளவாலையில் குழு மோதல்!!- இளைஞன் பரிதாபச் சாவு!!

January 28, 2023
யாழ்ப்பாணம்

மல்லாகத்தில் போதை மாத்திரைகளை விற்றவர் கைது!

January 28, 2023
யாழ்ப்பாணம்

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!- சோகத்தில் குடும்பம்!

January 28, 2023
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

January 27, 2023
யாழ்ப்பாணம்

கோப்பாய் வாள்வெட்டு!- குடும்பத்தினர் உட்பட 11 பேர் கைது!!

January 27, 2023
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி!

January 27, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?