By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல்!- இளம் பெண் தீயிட்டு எரிப்பு!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல்!- இளம் பெண் தீயிட்டு எரிப்பு!
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல்!- இளம் பெண் தீயிட்டு எரிப்பு!

Last updated: 2023/07/23 at 11:47 AM
Published July 23, 2023 285 Views
Share
1 Min Read
SHARE

வவுனியாவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொலைவெறிக் கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியதுடன், 21 வயதான இளம் பெண் ஒருவரைத் தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று(ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்த சிறுமி ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்திருக்கின்றது.

தோணிக்கல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கைகளில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து தாக்கியது. வீட்டின் உரிமையாளரை இலக்குவைத்தே அந்தக் கும்பல் வந்திருக்கின்றது என்று தெரிகின்றது.

வீட்டின் உரிமையாளர் மீது அந்தக் கும்பல் வாள்வெட்டு நடத்திய நிலையில், அவர் அவர்களிடம் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடி வீட்டுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியுள்ளார். அந்தக் கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.

வீட்டில் இருந்த பெண்கள், சிறுவர் சிறுமிகளையும் அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியதுடன், வீட்டுக்கும், வீட்டில் இருந்தவர்கள் மீதும் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதல் மற்றும் எரிகாயங்களுக்கு உள்ளான 21 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர், சிறுவர், பெண்கள் எனப் 10 பேர் வாள்வெட்டு மற்றும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 வயதுடைய சிறுவன், 7 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You Might Also Like

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

விபத்தில் ஆசிரியர் பலி.

Anarkali July 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சொகுசு ரயில் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்!
Next Article விபத்துக்களில் ஈடுபடும் சாரதிகளை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்த தீர்மானம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

August 8, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

August 5, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

August 5, 2025
வன்னிச் செய்திகள்

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

August 4, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

August 1, 2025
வன்னிச் செய்திகள்

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

July 31, 2025
வன்னிச் செய்திகள்

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

July 29, 2025
வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?