சிறைச்சாலை பாதுகாவலர்களின் 100 ஆவது அணியின் 8 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று(ஜூன் 3) யாழ்ப்பாணம் சிறைச்சாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் சிறைச்சாலை பாதுகாவலர்கள் உட்பட 100 பேர் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
இந்த நிகழ்வுக்கான அனுசரணையை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினர் வழங்கியிருந்தனர்.