By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண விசாரணை அதிகாரி இன்மையால் நெடுந்தீவு மக்கள் சிரமம்!
Share
Notification
Latest News
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > மரண விசாரணை அதிகாரி இன்மையால் நெடுந்தீவு மக்கள் சிரமம்!
நெடுந்தீவு

மரண விசாரணை அதிகாரி இன்மையால் நெடுந்தீவு மக்கள் சிரமம்!

Last updated: 2023/07/24 at 9:48 PM
Published July 24, 2023 657 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவானது தனியான பிரதேசசெயலக பிரிவாக உள்ளபோதும் போக்குவரத்து சிரமம் காணப்படுகின்ற போதும்  இதுவரை மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமை மற்றும் வைத்தியசாலையில் போதிய வசதிகளோ குளிரூட்டியோ இன்மையால் இவ்வாறான துன்பியல்புகளை தாம் தொடர்ந்தும் எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நெடும் பிரதேசமான நெடுந்தீவு தனி பிரதேச செயலர் பிரிவையும் தனிப்பிரதேச சபையினையும் கொண்டு தனித்து இயங்கும் ஒரு பிரதேசமாகும்.

இப்பிரதேசத்திற்கும் யாழ் பெருநிலப்பரப்புக்கும் இடையே கடல் வழித் தொடர்பு கொண்டிருப்பதும் நாளும் போக்குவரத்துகள் சிரமமானதாக இருக்கின்றமை என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில் நெடுந்தீவில் ஏற்படுகின்ற திடீர் மரணங்கள் தொடர்பில் அவற்றை விசாரித்து அதற்கான தீர்வுகளை கண்டு கொள்வதற்கு ஏற்ற வகையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமையால் ஊர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பலதடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அங்கு இடம்பெறுகின்ற திடீர் மரணங்களின் போது இறந்தவர்கள் உடலங்களை வெளியிடத்தில் இருந்து திடீர் மரண விசாரணை அதிகாரி வரும்வரை சம்பவ இடத்திலேயே வைத்திருப்பதும் , உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதும் வழக்கமான செயற்பாடாகியுள்ளது.

பரிசோதனைகளுக்காகவும் மரணம் விசாரணைகளுக்காகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வந்து மீள நெடுந்தீவுக்கு கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து செலவுகளை குடும்பத்தினரே ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சீரான ஒரு பிரேதஅறையோ, குளிரூட்டல் வசதிகளோ இல்லாத நிலைமை காணப்படுகிறது.

இதன் காரணமாக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பெரும் நிதிச்செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்று நெடுந்தீவு 13 ஆம் வட்டாரம் செபநாயகபுரத்தை சேர்ந்த 09 மாதமான சிசு மதன் மவுலின், தாய்ப்பால் அருந்தும்வேளையில் ஏற்பட்ட மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்து இறப்பு தொடர்பான வைத்திய பரிசோதனைகளுக்காக குழந்தையின் உடலானது யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!

நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பெருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவில் ஆயர் கிண்ணம் (BISHOP CUP 2025 ) சீருடை அறிமுக நிகழ்வு ஓகஸ்ட் – 14

நெடுந்தீவில் சதுரங்க சுற்றுத் தொடர் – பதிவுகள் ஆரம்பம்!

மூழ்கிய சுற்றுலாப் படகு இன்னும் கிடைக்கவில்லை!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஒன்றுகூடல் – ஜூலை 23!

Anarkali July 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா!
Next Article அறநெறி வகுப்புக்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துயைாடல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

July 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!

July 26, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !

July 26, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பெருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

July 25, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் ஆயர் கிண்ணம் (BISHOP CUP 2025 ) சீருடை அறிமுக நிகழ்வு ஓகஸ்ட் – 14

July 25, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் சதுரங்க சுற்றுத் தொடர் – பதிவுகள் ஆரம்பம்!

July 24, 2025
நெடுந்தீவு

மூழ்கிய சுற்றுலாப் படகு இன்னும் கிடைக்கவில்லை!

July 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஒன்றுகூடல் – ஜூலை 23!

July 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?