மட்டக்களப்பு பழுகாமத்தில் அமைத்துள்ள அருள்மிகு சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் எதிர்வரும் ஜூலை 02 புதன்கிழமை காலை 9.00 மணிமுதல் காலை 10.07 வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை எண்ணெய்க் காப்பு நிகழ்வு நாளை (ஜூலை 01) திங்கட்கிழமையன்று காலை 6.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
பழுகாமத்தில் வாழும் நெடுந்தீவின் மூதாதையர்களது வழித்தோன்றல்களான நெடுந்தீவார் எனும் ஒரு பகுதியினரால் நிர்வகிக்கப்படும் ஆலயமே இவ்வாறு குடமுழுக்கு காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் அருள்மிகு சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நெடுந்தீவிலும் , அம்மன் ஆலயத்திலும் கும்பாபிசேகம் சிறப்பாக இடம்பெற நெடுந்தீவு மக்கள் வாழ்த்தும் பாதாகைகள் கட்டப்பட்டுள்ளமை சிறப்பாகும்.