நெடுந்தீவு மாவிலித்துறை முகப்பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று(மே 9) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
அடையாள அணிவகுப்பின் போது அவரை நெடுந்தீவு கிராம அலுவலர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் கொலை இடம்பெற்ற வீட்டில் பணிக்காக சென்று வந்த நெடுந்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரும் குறித்த சந்தேக நபரை அடையாளம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.