நெடுந்தீவு பிரதேச செயலகமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்இணைந்து நடாத்தும் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் புத்தாண்டுவிற்பனைச் சந்தையும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் நா நகுலராணி அவர்களின்தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி . நிவேதிகா கேதீசன்அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எம் தீவின்பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகளார் கலந்துகிண்டு சிறப்பித்தார்.
இவ் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்திஉத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.