இன்று நெடுந்தீவு தெற்கு (ஜே|06) கிராம அலுவலர் பிரிவின் குயிந்தா கடற்கரையில் கரையொதுங்கி காணப்படும் பிளாஸ்டிக் தயாரிப்பு இரசாயனமுலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்புஅதிகார சபையினரின் தலைமையில் நெடுந்தீவு பிரதேச இலங்கைகடற்படையுடன் இணைந்து முதற்கட்டமாக செயல்ப்படுத்தபட்டது.
கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் இரசாயன முலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம்இன்றையதினம் (ஜூன்16 ) நெடுந்தீவு கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குயிந்தா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து வரும் நாட்களில் ஏனைய பகுதிகளில் உள்ளவையும் அகற்றப்படும் எனத் தெரிவக்கப்படுகின்றது.