By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாய்க்குட்டிகளை எரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் அசமந்தம்!
Share
Notification
Latest News
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நாய்க்குட்டிகளை எரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் அசமந்தம்!
இலங்கைச் செய்தி

நாய்க்குட்டிகளை எரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் அசமந்தம்!

Last updated: 2023/06/22 at 9:43 PM
Published June 22, 2023 345 Views
Share
1 Min Read
SHARE

ஏழு நாய்க்குட்டிகளை எரித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் தொடர்பில் நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை ஒரு மாதம் நிரம்பிய 7 நாய்க்குட்டிகளை ஒருவர் தீயில் இட்டுக் கொன்றை கோரச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், தவசிக்குளம் பிரதேசத்தில் நடந்திருந்தது.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக, சம்பவத்தின் நேரில் கண்டவரின் தொலைபேசி இலக்கம், சந்தேகநபரின் முகவரி, பெயர் விவரம் என்பன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டதுடன், சம்பவத்தை நேரில் சென்று ஆராயவும் கடந்த திங்கட்கிழமை இரவு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டபோது, முறைப்பாடு கிடைக்கவில்லை என்றும், முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, அந்த அதிகாரியை நேரில் சென்று ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தேன். அவர் செல்லவில்லை, மீள அறிவிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.

நேற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்ணுக்கு பல தடவைகள் அழைப்பெடுத்தபோதும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பெடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வினவியபோது, இதுவரை சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

தீவகத்தில் நாய் ஒன்றின் கால்கள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட காணொலி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியபோது, யாழ்ப்பாணம் பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்து சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர்.

ஆனால், போதிய தகவல்கள் வழங்கப்பட்டும், கொடிகாமம் பொலிஸார் நாய்க்க்குட்டிகளை எரித்தவர் மீது இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளமை விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali June 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உணவு அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!
Next Article நெடுந்தீவில் கள் விற்பனை நிலையம் அமைக்கக் கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?