நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கைதடி நவீல்ட் பாடசாலை மாணவியான நந்தகுமார் (ரெயிலர் குமார் ) கிருஸ்திகா என்பவரின் தவறவிடப்பட்ட ஆவணங்கள் நேற்று(மே 9) கிளிநொச்சி டிப்போவில் இருந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுச் சான்றிதழ்கள், பாடசாலை தேர்ச்சி அறிக்கை மற்றும் கலைநிகழ்வுகளுக்கான சான்றிதழ்கள்
என்பன அண்மையில் பேரூந்தில் தவறவிடப்பட்டிருந்தன.
ஆவணங்களை கண்டெடுத்தவர்கள் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு ஒப்படைத்து உதவுமாறு கோரப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த ஆவணங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆவணங்களை தொலைத்தவரின் உறவினர் ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தொலைபேசியூடாக நன்றி தெரிவித்துள்ளார்.