ஏ9 வீதி மாங்குளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பதினெட்டாம் போர்காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவுசெய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்ஊடகவியலாளர் தவசீலன் அவர்களது ஒளிப்படகருவியை பறிக்க முற்பட்டதோடுஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலைஅச்சுறுத்தல் விடுத்து நிலையில் மாங்குளம் போலீசாரின் உதவியுடன் தவசீலன்குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்டபனிக்கன்குளம். கிழவன்குளம். பதினெட்டாம் போர் . கொக்காவில் உள்ளிட்டபகுதிகளில் ஏ9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில்சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது
அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும்அனுமதி பத்திரங்கள் பெறப்படாதும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவுஇயந்திரங்களை விட்டு மணல்களை ஏற்றி காட்டுப்பகுதிகளிலேயே மணல்களைபறித்து காட்டுக்குள் டிப்பர் வாகனங்களை கொண்டு சென்று மண் ஏற்றும் மரம்கடத்துகின்ற பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில்ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்கசென்று இருந்தார்
காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்குவருகைதந்து யார் வீடியோ எடுக்க சென்னது என்றும் வீடியோ எடுக்க விடாதுதடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில்இருந்து எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்விடுத்துள்ளனர்
இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் குறித்த காட்டுக்குள்செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள்செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களால் மாங்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.