கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால்நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான இவர் இறுதியாக மட்டக்களப்புமாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாகபணியாற்றியவராவார்.
இதேவேளை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாணஅலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று(ஜூன்03) பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால்உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜெசுந்தரவும் கலந்துகொண்டார்.