கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை திருவிழாவுக்கு 8 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் இன்று (ஜனவரி 27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முன்னாயத்த கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து500 இலங்கை பக்தர்களும், 3 ஆயிரத்து 500 இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பற்றுதலோடு உற்சவத்தினை நடத்துவது என்று இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின்இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.