கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில்நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஆறுஆண்டுகள் நிறைவடைகிறது.
உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள்ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ்பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் தொடங்கி, கொச்சிக்கடை புனிதஅந்தோனியார் தேவாலயத்தை சென்றடைந்து காலை 8:30 மணிக்குகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், பேராயர் கர்தினால்மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 8:45 க்கு, அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.