75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு அரச நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்படவுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு இது தொடர்பான சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.