யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது.
நேற்று (மே 9) காலை குழந்தையின் தாயார் சமையல் வேலைகளை செய்துகொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றினுள் தவறி விழுந்துள்ளது.
குழந்தை மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.