நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலய மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான சித்திரப் போட்டி மற்றும் துரித கணித போட்டிகளில் தீவக வலயமட்ட போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
வலய மட்ட துரித கணித மற்றும் சித்திரப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களையும்சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (ஜூன்03) வித்தியாலய அதிபர் எஸ்.சிவகுமார் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பாடசாலை சமூகம் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.