முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளவீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும்சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டபனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த தாய் ஒருவரும்அவரது 2 பிள்ளைகளுமே சடங்களாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ளஅரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றில்இருந்து சடலமாக இன்று (ஜூலை 24) மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள்சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில்கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில்சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்துமுல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்துபார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்றுபரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) மற்றும் மிக்சா(வயது 11), சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்களது இறப்பு தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.