By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களின் 200 வருட வரலாறு’ நூல் அறிமுகவிழா!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களின் 200 வருட வரலாறு’ நூல் அறிமுகவிழா!
வன்னிச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களின் 200 வருட வரலாறு’ நூல் அறிமுகவிழா!

Last updated: 2023/08/22 at 9:51 AM
Published August 22, 2023 289 Views
Share
3 Min Read
SHARE

மலையகத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், 1966 ஆம் ஆண்டில் வவுனியாவில் குடியேறியவரும், வவுனியாவின் மணிபுரம் எனும் கிராமத்தின் பெயருக்கு உரியவருமான எழுத்தாளர் கலாபூசணம் இரா. சுப்பிரமணியம் எழுதிய ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ நூலின் அறிமுக விழாவானது நிறைந்த மக்கள் பங்கேற்போடு இடம்பெற்றது.

நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 20) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஈழத்தின் வன்னி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வுக்கு சமூகச் செயற்பாட்டாளர் மாங்குளம் பழனியாண்டி நாகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும், ஐ.பி.சி சி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் பங்கேற்றார்.

தொடக்க நிகழ்வாக நூலாசிரியரும், விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகள் இசைத்தனர். வரவேற்புரையினை சிவகுமார் திலகேஸ்வரி நிகழ்த்தினார். தலைமை உரையினை பழனியாண்டி நாகேந்திரன் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் நிகழ்த்தினார். ‘மலையக பகுதிகளில் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை’ என அவர் குறிப்பிட்டார்.

ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தனது உரையில் ‘மலையக மக்கள் இப்பொழுது பெரு வளர்ச்சியை கண்டு வருவது மகிழ்ச்சி தருகின்றது’ என்று குறிப்பிட்டார்.

நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் வழங்கி வைக்க முதலாவது பிரதியினை ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் நூலினை பெற்றுக் கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை இலக்கிய விமர்சகரும், கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபருமான பெருமாள் கணேசன் நிகழ்த்தினார். மலையக மக்களின் வரலாறு மாணவர்களுக்கான வரலாற்றுப் பதிவாக அறிமுகம் செய்து வைக்கப்படுவதில் நாம் வெற்றி பெறவில்லை என்பதை அவர் பதிவு செய்தார்.

இந்த நூலின் ஆசிரியர் இரா. சுப்பிரமணியம் அவர்கள் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சில காரணங்கள் கருதி நாடாளுமன்றத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொண்டவர் என்றும், இவருடைய பெயரினால் வவுனியாவில் ஒரு கிராமம் இருக்கின்றது என்பதையும் யோ.புரட்சி தனது தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

‘மலையக மக்கள் வடக்கு கிழக்கு எங்கும் பரந்து வாழ்கின்றனர் அவர்கள் மலையகத்துக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்கும் பாதுகாப்பாக உள்ளனர்’ என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். ‘மலையக மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதே எமது அவா’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

‘மலையக மக்களுக்கு தேவை அனுதாபம் அல்ல நியாயமே’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனதுரையில் குறிப்பிட்டார்.

‘இன்று புகழ் பெற்றுள்ள பாடகி ஆசானி மலையகத்தின் இளைய திறமையின் சான்று’ என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார்.

ஏற்புரையினை நூலாசிரியர் இரா. சுப்பிரமணியம் வழங்கினார். இவ்வளவு நிறைந்த மக்களோடு மலையக வரலாறு வெளியீடு செய்யப்படுவது மனமகிழ்ச்சி அளிப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் 310 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதி உதவியினை சமூகச் செயற்பாட்டாளர் நாகரூபன் அவர்கள் வழங்கி இருந்தார். நன்றியுரையினை சுப்பிரமணியம் சசிகாந் வழங்கினார்.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali August 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நினைவு நல்லது நூல் அறிமுக விழா எதிர்வரும் 29 ஆம் திகதி!
Next Article வட்டுக்கோட்டையில் வீடு ஒன்று முற்றாக எரிந்து தீக்கிரை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?