By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லை என்பதால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். – கருணாகரன் குணாளன்
Share
Notification
Latest News
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லை என்பதால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். – கருணாகரன் குணாளன்
தீவகச் செய்தி

புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லை என்பதால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். – கருணாகரன் குணாளன்

Last updated: 2025/01/07 at 3:21 PM
Published January 7, 2025 287 Views
Share
1 Min Read
SHARE

புங்குடுதீவு பகுதியில் பல ஆண்டுகளாக அரசாங்க அல்லது தனியார் வங்கிகள் இல்லை எனவும், இதனால் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. கருணாகரன் குணாளன் கூறியுள்ளார். வங்கிச் சேவைகள் பெறுவதற்காக புங்குடுதீவிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வேலணைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் தெரிவித்தார்.

வங்கிச் சேவை மற்றும் ஏ.டி.எம் (தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம்) இல்லாமல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி நாளாந்த கூலித்தொழிலாளர்களும் சேமிப்பை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் ஏ.டி.எம் சேவையாவது புங்குடுதீவு பகுதியில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த அவசிய தேவையை பலமுறை பொது அமைப்புகள், பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தபோதும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிறிய அளவிலான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே அதிக செலவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் புங்குடுதீவு மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், புங்குடுதீவு சந்தையடி அல்லது குறிகாட்டுவான் பிரதான வீதியில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க தேவையான இடத்தை அல்லது கட்டிடத்தை தனது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்க தயாராக உள்ளதாகவும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க இந்த முயற்சிக்கு ஆதரவாக அரச மற்றும் தனியார் வங்கி நிறுவனங்கள் தொடர்பு கொள்ளுமாறு 0778945856 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுமென்றும் திரு. கருணாகரன் குணாளன் கேட்டுக்கொண்டுள்ளார்.

You Might Also Like

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

SUB EDITOR January 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவுக்கான மின்விநியோகத்தில் தினமும் 07 மணிநேர மின்வெட்டு!!
Next Article உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்த வரைவு அரச வர்த்தமானியில்!l
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.

You Might Also Like

தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025
தீவகச் செய்தி

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

July 16, 2025
தீவகச் செய்தி

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

July 13, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

July 12, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?