சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை வட மாகாண ஆளுநர் நேரில் பார்வை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்போதனா மருத்துவமனையில் இன்று (09.05) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment