குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்பின் போது சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் அமைப்பதற்கான இடவசதி மற்றும் திட்டமிடல் தொடர்பாக ஆராய்வு குறிகட்டுவான் பகுதியில் இன்றையதினம் (ஜூன் 17) இடம்பெற்றது .
இவ் நடவடிக்கையில் வேலணை பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கடலோரபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.