By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன்
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன்
தீவகச் செய்தி

குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன்

Last updated: 2021/04/24 at 9:04 PM
Published April 24, 2021 418 Views
Share
3 Min Read
SHARE

குட்மோர்னிங் சொல்லாத மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை  வைத்தியசாலையில் மாணவன்

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு பிள்ளைகளுடன் ஊர்காவற்றுறையில் வசிக்கும் பெண் தனது பிள்ளையை ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்த்து , அங்குள்ள மாணவர் விடுதியிலும் (ஹொஸ்டல்) சேர்த்துள்ளார்.

படிப்பில் கெட்டிக்காரனான மாணவன் விடுதியில் தங்கி தனது கல்வியை தொடர்ந்து வந்துள்ளான். தரம் 09 இல் கல்வி கற்கும் குறித்த மாணவனே வகுப்பு தலைவரும் (மொனிட்டர்) ஆவான்.

கடந்த 18ஆம் திகதி வகுப்பு ஆங்கில ஆசிரியை வந்த போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங் மிஸ்” என கூறி விட்டு அமர்ந்துள்ளான். அதனை அவதானிக்காத ஆசிரியை தான் வகுப்புக்கு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்துள்ளார். அதன் போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதனால் வேதனையில் மாணவன் அழுத போது , தான் கற்பிக்கும் போது , அழுது தொந்தரவு செய்ய வேண்டாம் என மிரட்டியுள்ளார்.

அவரது பாடம் முடிந்த பின்னர் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியரிடம் , மாணவனை ஆசிரியை அடித்து கண்ணில் தடிபட்டு அழுது கொண்டு இருக்கிறான் என கூறியுள்ளனர். வகுப்பாசிரியர் மாணவனை அழைத்துச் சென்று தண்ணீரினால் கண்களை கழுவி விட்டுள்ளார். இருந்த போதிலும் கண் வலி மாணவனுக்கு குறையவில்லை.

பாடசாலை முடிந்து விடுதிக்கு சென்ற பின்னரும் மாணவன் வலியினால் துடித்து அழுதுள்ளான்.அது தொடர்பில் சக மாணவர்கள் விடுதி பொறுப்பாளரும் , பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் கூறியுள்ளனர். அவர் மாணவனை அழைத்து அருகில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் , அங்கு வைத்தியர்கள் கேட்டால் விளையாடும் போது கண்ணில் தடிபட்டு விட்டதாக கூறுமாறும் , கூறி சக மாணவனுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வைத்தியசாலையில் கண்ணுக்குள் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்துள்ளனர். வைத்தியர் கேட்ட போது , விளையாடும் போது தடி பட்டதாகவே கூறியுள்ளனர். இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையில் மகனை சந்தித்து அது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு பாடசாலை அதிபரை சந்திக்க காத்திருந்துள்ளார்.

பாடசாலை அதிபர் அறைக்கு அருகில் பல மணிநேரம் காத்திருந்த போது அவ்வழியே சென்ற ஆசிரியர்கள் விசாரித்து விட்டு சென்றார்களே தவிர யாரும் அதிபரிடம் கூட்டி செல்லவில்லை. மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஆண் ஆசிரியர்கள் அதிபர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறைக்குள் தாயாரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்கமாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர்.

அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை ? பிள்ளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான், அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும் , அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார். ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வருகிறோம் என போனவர்கள் , அதிபரை அழைத்து வரவே இல்லை .

பாடசாலை முடிவடைந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார். தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் , ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களுக்கும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தாயார் சென்றதும் , விடுதியில் வைத்து , “கோத்தைக்கு யாருடா சொன்னது , கொப்பன் ஏன் கோத்தையை விட்டுட்டு போனான் என இப்ப விளங்குது” என சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்கு மாணவனை திட்டி அடித்துள்ளார். அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளான்.

தற்போது மாணவன் அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது

You Might Also Like

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

SUB EDITOR April 24, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புங்குடுதீவில் வாகனம் மோதி பாடசாலை மாணவி காயம்
Next Article வட்டுவாகலில் குண்டுவெடிப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025
தீவகச் செய்தி

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

July 16, 2025
தீவகச் செய்தி

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

July 13, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

July 12, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?