இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் எதிர்வரும் 16ஆம் திகதியுடன் நிறைவடையஉள்ள நிலையில் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி எல்லை தாண்டும் இந்தியரோலர் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி
கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர்கிராமிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ்தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட கடற்த் தொழிலாளர்கூட்டுறவு சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவில் இரண்டு மாத காலம் மீன்பிடித்தடைக்காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்மீண்டும் எமது மக்கள் பாரிய துன்பத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.
தடைக்காலத்துக்கு முன்னர் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தியஅத்துமீறிய இழுவைப் படகுகள் அழித்து வந்த நிலையில் மீண்டும் அழிக்க வரப்போகிறார்கள்
இந்தியா ஆத்துமீறிய கடற் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துமாறு பல்வேறுபட்டபோராட்டங்களை நடாத்தியும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தியா மீனவர்கள் தமது கடற்பகுதிகளில் மீன் பிடிப்பது போல எமது கரை வரைமீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்
மீன்பிடி தடைக்காலமானம் இரு மாத காலமும் நிறைவடைய உள்ள நிலையில்எமது மீனவ சமூகம் நிம்மதியாக தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை தாமேபார்த்துக் கொண்டார்கள்.
இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எமது மீனவ சமூகத்தின் எதிர்பார்ப்புஆனால் இந்திய மீனவர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
எமது கடற் பரப்புக்குள் அத்து மீறி உள்நுளைந்து எமது வளத்தை அழிக்கும்இந்திய ரோலர்களை கடற்படையினர் கைது செய்ய வேண்டும்.
கைது செய்ய முற்படும் போது தப்பிச்செல்லும் ரோலர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்கடற்படையினருக்கு நாங்கள் ஆதரவாக நிற்போம்.
ஆகவே எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் கடற்த் தொழில் அமைச்சர் ஆகியோர்இந்தியா இழுவைமாடிப் படகுகள் எமது எல்லைக்குள் வருவதை தடுத்து நிறுத்திஎமது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவ வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும்கலந்து கொண்டனர்.