தமிழ் இனப்படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்நிகழ்வுகள்இன்றையதினம் (மே18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.
இன்றையதினம் (மே18) காலை 10.00 மணிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் பிரகடனம் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பினால் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொதுவெளியில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
காலை 10:31 மணிக்கு உயிரிழந்த அனைவரது நினைவாகவும் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய கூடியிருந்த உறவுகளும் உயிரிழந்தஉறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள்அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறுதரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வலி மிகுந்த வரலாற்றின்சாட்சியான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுதோறும் உலகம்முழுதும் உள்ள தமிழர்களால் உணர்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது