By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கை – இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கை – இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை!
இலங்கைச் செய்தியாழ்ப்பாணம்

இலங்கை – இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை!

Last updated: 2023/04/13 at 2:52 AM
Published April 13, 2023 322 Views
Share
2 Min Read
SHARE

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு ஆதரவாக அதிக போக்குவரத்துக்கு இடமளிக்கும் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில், இலங்கை கடற்படை காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் மிகவும் மலிவு மற்றும் வசதியான போக்குவரத்து முறையை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கடற்படை, காங்கேசன்துறை துறைமுக வசதியை அதன் ஆளணி மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் விரிவாக்குவதற்கு தீவிரமாக ஆதரவளித்துவருகிறது.

அதன்படி, கடற்படையினரால் இந்த திட்டம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி தொடங்கப்பட்டது.

இதனால், இந்தப் பயணிகள் படகுச் சேவையைப் பயன்படுத்த உத்தேசித்துள்ள மக்களின் குடிவரவு மற்றும் சுங்க அனுமதிக்கான பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் பணியை, இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையால் வழங்கப்படுகின்றன.

தற்போது, கடற்படை கட்டுமானப் பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ், 60 கடற்படை வீரர்கள் கொண்ட குழு 1,000 சதுர மீற்றர் பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பயணிகள் முனையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் முடிவடைந்து அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்காக இந்த வசதி இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபைக்காக இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும் மொத்த கட்டுமானங்களுக்காக 144 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் ஆம் திகதி படகுச் சேவையின் செயல்பாடுகள் தொடங்கும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு கடந்த மாதம் தெரிவித்தது.

இதனூடாக, 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல பயணியொருவருக்கு அனுமதி வழங்கப்படும் அதே வேளையில், ஒரு வழி பயணத்துக்கு ஒருவருக்கு 50 அமெரிக்க டொலர் (சுமார் 15,000 ரூபா) வசூலிக்க படகு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டத்தில் பகல்நேர சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும். ஒரு வழி பயணத்துக்கு 4 மணி நேரம் செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

SUB EDITOR April 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குமுதினிப் படகு திருத்த வேலை தொடர்பில் கள ஆய்வு – சி.சிறிதரன் MP குழுவினர்.
Next Article ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?