நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும் புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக “BISHOP CUP – 2024“ நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த வகையில் கிரிக்கெற் சுற்றுத்தொடருக்கான வீரர்களை புள்ளி அடிப்படையில் ஏலம்பெறும் நிகழ்வு நேற்றையதினம் (ஜூன் 24) மாலை நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மண்டபத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகளாரின் மேற்பார்வையில் நேர்த்தியாக இடம்பெற்றது.