சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக(ADS) கடமையாற்றிய போது தீயில்எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் கொழும்பில்இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேசசெயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழத்தார்.
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண்அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவைஉயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்ற நிலையில் பயனளிக்காத நிலையில்அவரது மரணம் சம்பவித்தது.
இந்நிலையில் தமிழினியின் பெற்றோர் தரப்பினரால் கணவர் மீதுகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்தவிசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.