வடக்கில் 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (18/09) வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண தாதியர் கல்லூரி உள்ளிட்ட, மத்திய சுகாதார அமைச்சின் கீழும் வட மாகாண சபையின் கீழும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான 350 புதிய சுகாதார உதவியாளர்களின் நியமனம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இன்று (18/09) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நியமனத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 45 சுகாதார உதவியாளர்கள் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையிலும், 5 பேர் யாழ்ப்பாணம் தாதியர் கல்லூரியிலும், மாகாண சபையின் கீழ் நியமிக்கப்பட்ட 300 பேர் வட மாகாணத்தில் உள்ள மற்றய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ச.ஸ்ரீபவனந்தராஜா, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Share this Article
Leave a comment