வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (15.04) யாழ் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.