வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட வழக்கு பதிவு !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.

உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க வியாழக்கிழமை (09/04) முதல் வெள்ளிக்கிழமை (10/05) வரையில் தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடத்தப்படும் உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment