எதிர்வரும் 6 ஆம் திகதி, நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்த அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகள் தவிர, மற்ற அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.